குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு தொழிலதிபர் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீன காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மயூர்த்வாஜ்சிங் ஜலா எம்.ஜி.ஜெய் கணேஷ் ஆட்டோகார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .51,000 செலுத்தி 2019 ஜூலையில் எம்.ஜி. ஹெக்டர் காரை முன்பதிவு செய்திருந்தார். இந்த காரானது சீன ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின் (எஸ்.ஏ.ஐ.சி) துணை நிறுவனமான எம்.ஜி. ஹெக்டர் இந்தியாவின் தயாரிப்பாகும்.
இந்நிலையில் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் எம்.ஜி. ஹெக்டர் “சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன்” தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் என்பதால் நான்அதை வாங்க விரும்பவில்லை.எஸ்.ஐ.ஐ.சி ஒரு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம், எனவே நான் எந்த வியாபாரத்தையும் செய்ய விரும்பவில்லை அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பொருளையும் பயன்படுத்த விரும்பவில்லை என்று அந்த கார் விற்பனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
இது குறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், பணம் திருப்பித் தரப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…