குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார்.
மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஆனந்த் ஷெகாவத், தாரசந்த் பராலா, அசோக் பிலெடா, விஜேந்திர சிங் மற்றும் பவன் மிஸ்திரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காரை ஓட்டியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…