Categories: இந்தியா

GST tax evasion: 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! 719 பேர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 719 பேர் கைது.

கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மோசடியை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி செல்லுவதற்கான அடையாள எண்களில் 22,300க்கும் மேற்பட்ட போலிகளையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின் (டிஜிஜிஐ) அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தெத்து போலி விலைப்பட்டியல்களை வழங்கி, அதன் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஏய்ப்பதன் மூலம் மோசடியான முறையில் உள்ளீட்டு வரிக் கிரெடிட்டை (ITC) பெறுவதற்கும் அனுப்புவதற்கும் நேர்மையற்ற நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய சிறப்பு இயக்கத்தை அரசாங்கம் தொடங்கியது.

இந்த நிலையில், சிறப்பு இயக்கத்தின் இரண்டு ஆண்டுகளில், 55,575 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜிஎஸ்டி/ஐடிசி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 20 CA/CS வல்லுநர்கள் அடங்குவர் என்றும் ஜிஎஸ்டி அதிகாரி கூறினார். இந்த காலகட்டத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தன்னார்வ டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நம்பகமான உளவுத்துறை, டிஜிஜிஐ, டிஆர்ஐ, வருமான வரி, அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ போன்ற உளவுத்துறை நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க உதவியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வரி ஏய்ப்பைத் தடுக்க ஜிஎஸ்டி துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், போலி ஐடிசி உரிமைகோரல்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அக்டோபரில், ஜிஎஸ்டி வருவாய்கள் 1.52 லட்சம் கோடி ரூபாயில் இரண்டாவது அதிகபட்ச வசூலைப் பதிவு செய்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு அடுத்தபடியாக ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து எட்டு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago