கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

Published by
Rebekal
  • இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
  • இதில் புதிய வரிவிலக்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் மத்திய மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சைக்கு எதிராக அளிக்கப்படக் கூடிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அம்போட்டெரிசின் பி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் மருந்து ஆகியவற்றிற்கு முற்றிலுமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் வெண்டிலேட்டர், மாஸ்க், பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றிற்கான வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்களுக்கான வரி 28% இல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், இந்த வரி குறைப்பு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்கான வரிகள் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான விவரம் இதோ,

Published by
Rebekal

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

8 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

8 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

10 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

10 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

13 hours ago