2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல்.
ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது.
மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு ஜனவரி மாதம் வரையிலும், ரூ.21,322 கோடி பிப்ரவரி-மார்ச் வரையிலும், ரூ.17,973 கோடி ஏப்ரல்-மே வரையிலும் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள இந்த தொகையில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் 41% உயர்ந்து, ரூ.7,910 கோடியாக அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு, நேற்று மத்திய அரசு பிரித்து கொடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…