சற்று முன்னர்…தொடங்கியது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – எவை குறித்து ஆலோசனை!

Default Image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் நாளையும் நடைபெற உள்ள நிலையில்,இதில்,பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்தும், வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான வழிமுறைகள்,சில பொருட்களுக்கான வரி விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் சிறிய ஆன்லைன் சப்ளையர்களுக்கான பதிவு விதிமுறைகளில் தளர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக,ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும்,ஆன்லைன் விளையாட்டுகள்,கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியை 28% ஆக உயர்த்துவது,கிரிப்டோகரன்சிகள் மீதான வரி விதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்