ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது.
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தற்போது ஒரு சதுர கி.மீ உள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வந்திறங்கினால் ஒருநாளில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை தின்று தீர்க்கும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு விரட்ட வெடி வெடிப்பது, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்புவது, அரசு சார்பில் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் மத்திய அரசிடம் 84 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…