பேரன் திருமணத்துக்காக பலகாட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்த தாத்தா பாட்டி!

Published by
Rebekal

பேரனின் திருமணத்திற்காக  பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பாலக்காட்டில் இருந்து வந்த தாத்தா பாட்டியின் அசத்தலான செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொலைதூர பயணம் என்றாலே கார்கள் அல்லது பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவை சேர்ந்த வயதான கே என் லட்சுமி நாராயணன் மற்றும் சரஸ்வதி ஆகிய வயதான தம்பதியினர் தனது பேரனின் திருமணத்திற்கு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் வருவதற்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள எண்ணி ஹெலிகாப்டரில் ஆகாயமார்க்கமாக பறந்து வந்துள்ளனர். கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த 90 வயதான லட்சுமிநாராயணன் பேரனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 85 வயதான தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.

அவர்களின் மகனும் தனது அப்பா அம்மாவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்களது பயணத்தை இனிமையாக்கியுள்ளார். நாங்கள் எங்கள் பேரன் டாக்டர் சந்தோஷம் திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினோம், சாலையில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் மகன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான். எங்களுக்கு இந்த வயதில் கூட ஹெலிகாப்டரில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது நினைத்து அதிர்ஷ்டமாக கருதுகிறேன், இதுதான் எங்களது முதல் வான் வழி பயணம் கூட என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பேரன் திருமணத்தை முடித்துவிட்டு நாளை மீண்டும் இவர்கள் ஹெலிகாப்டரில் ஊர் திரும்ப உள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

1 hour ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago