காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த நடைமுறை அக்டோபர் -31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இணையதள சேவை ,செல்போன் சேவை,லேண்ட் லைன் சேவைகள் முடக்கப்பட்டது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் நிலைமை மாறி வருகிறது.இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் .ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் வரும் நாட்களில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.குப்வாரா, ஹண்ட்வாரா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…