இந்தியாவில் வெங்காய விலை உச்சியை தொடும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பலத்த மலை பெய்து வருவதால், வெங்காய பயிர்கள் அழுகி வருகிறது. இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்பொழுது கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் பல நாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு லட்சம் டன் வெங்காயங்களை இறக்குமதி செய்யவுள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக அப்கானிஸ்தானில் இருந்து மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி. (MMDC) நிறுவனம் மூலம் 4 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யவுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தொடர்ந்து, வெங்காய விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் இந்திய சந்தைகளில் வெங்காய வரத்து அதிகரித்து, விலை-யும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…