மகாராஷ்டிரா ஆளுநர், தனது சொந்த மகள் போல தனது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையான நிலையில், சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசேனா கட்சி ஆளும் மஹாராஷ்ரா மாநிலம், கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
அந்தவகையில், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், இடிக்கப்பட்டது. அதற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அதிருப்தி தெரிவித்தார். இதன்காரணமாக கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை நேற்று மாலை சந்தித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு நடந்த அநியாத்தை பற்றி ஆளுநரிடம் விளக்கமாக கூறியதாக தெரிவித்த அவர், விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவதாக கூறினார். மேலும், ஆளுநர் தனது சொந்த மகள் போல தனது குறைகளை கேட்டறிந்தது, எனது அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…