மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும் – சோனியா காந்தி

Default Image
  • நாடு  முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  
  • மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும் என்று  சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில்  இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது

இது குறித்து காங்கிரஸ் இடைக்கால கமிட்டி தலைவர் சோனியா காந்தி கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.ஜனநாயக நாட்டில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு உரிமை உண்டு.போராடும் மக்கள் மீதான வன்முறைகளை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்