Categories: இந்தியா

வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

Published by
மணிகண்டன்

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன.

இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேளாண் துறை, விவசாயம் தொடர்பாக பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து, நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘ பொருளாதாரத்தை இயக்குவதில் நமது நிதித்துறை எப்படி செயல்பட்டது என்பது தொழில்துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பு இன்று மிகத் தெளிவாக கூறப்படும்.

இடைக்கால பட்ஜெட் என்பதால், நமது நிதிப்பற்றாக்குறையை நம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று அனைவரும் உற்று நோக்குகின்றனர். நாம் வரி செலுத்துவதன் மூலமும், மக்கள் மற்றும் வணிகர்களிடம் உரிய வரி வசூலிப்பதன் மூலமும்,  இந்தாண்டு நியாயமான முறையில் நல்ல வரி வசூல் இருந்துள்ளது.

ஒட்டுமொத்த  உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கான அரசு செலவினம் இரண்டிற்கும் ஒட்டுமொத்த வரி வசூல் வரம்பிற்குள் இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் நிதி நிர்வாகத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும் என்ற தொழில்துறையின் எதிர்பார்ப்பு, பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வரி வசூல் மூலம் நமது நிதிப்பற்றாக்குறையை 5.9% ஆகக் கட்டுப்படுத்த முடிந்ததாக ஒரு அறிவிப்பு இன்று வெளியாகும்.  இந்த வரி வசூல் இன்னும் சிறப்பாக இருந்தால், நிதி பற்றாக்குறையை மேலும் ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் தனியார் செய்தி  நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

 

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

39 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago