தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் – ICMR அறிவிப்பு..!

Published by
Edison

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த  கோவாக்சின் ,கோவிஷீல்டு போன்ற தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன.ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் தயங்கிய நிலையில்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்போசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ஸ்புட்னிக் ,பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு வழங்கியது.இந்த தடுப்பூசி மருந்துகள் இரண்டு தவணைகளாக செலுத்தும் வகையில் உள்ளன.

ஆனால்,நேற்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்துக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டு அனுமதியை வழங்கியது.இந்த தடுப்பூசி மருந்தினை ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,வெளிநாடுகளில் இரு வேறு நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகளை கலவையாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது இந்தியாவிலும் சாத்தியமா? என்று அறிய கடந்த மாதம், இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழு, டிசிஜிஐ, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளின் கலவை அளவுகள் குறித்து ஆய்வு நடத்த பரிந்துரைத்தது.

இந்நிலையில்,கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR) தெரிவித்துள்ளது.

மேலும்,ஒருவர் ஒரு டோஸ் கோவிஷீல்டும்,இரண்டாவது டோஸ் கோவாக்சினும் செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

15 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

34 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago