கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இந்நிலையில், பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், ஏழ்மையின் காரணமாக மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவருக்கு பழக்கமான அலூமூத்தில் என்ற முஸ்லிம் குடும்பத்தாரிடம் மகளின் திருமணம் உதவி குறித்து பிந்து கேட்டிருக்கிறார். பின்னர் அவர் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ள நிலையில், பிந்து குடும்பத்திற்கு உதவி வேண்டுமென்று மசூதியில் தொழுகைக்கு வந்தவர்களிடன் கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும் பிந்துவின் நிலைமை கருதி அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வரும் ஜனவரி 19-ம் அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறுகையில், தற்போது நாடு முழுவதிலும் மத சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…