அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Published by
பாலா கலியமூர்த்தி

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) 3% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 34 சதவீதமாக உயர்த்துவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயணப்பெறுவர்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியாக ரூ.18,000 செலுத்தி வந்த நிலையில், தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வின்படி ரூ.24,000 ஆக உயர்த்தப்படும் எனபது குறிப்பிடப்படுகிறது. பணவீக்கத்தால் ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

01.01.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago