பணிக்கு திரும்ப முடியாமல் தவித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி.!

Published by
மணிகண்டன்

ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வருகை பதிவேட்டை பற்றி கவலையில் இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பணிக்கு செல்ல முடியாமல் தங்களது பணி வருகை பதிவேட்டை பற்றி கவலைப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்காக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகமானது (The Department of Personnel & Training of the Ministry of Personnel, Public Grievances and Pensions)  ஜூலை 28 அன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த குறிப்பில் ஊரடங்கு காலத்தில் தங்களது பணிக்கு திரும்ப முடியாமல் தங்களது வருகைபதிவை பற்றி கவலைப்படும் ஊழியர்களுக்கு தெளிவான விளக்கம் தரும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து கிடைக்காமல் தனது உத்தியோகத்திற்கு செல்ல முடியாமல் இருந்த அரசு ஊழியர்கள் அவர்களின் நிலைமை குறித்து மேலதிகாரிகளுக்கு முறையான அறிக்கை தாக்கல் செய்யலாம்.

நீண்ட விடுப்பில் இருந்த ஊழியர்களின் விடுப்பு காலமானது ஊரடங்கு தொடங்கப்பட்ட பின், அதாவது 25.3.2020 அன்று முதல் விடுப்பு முடிவடைந்து அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாட்களாக கணக்கிடப்படும்.

ஊரடங்கிற்கு முன்னர் அலுவலகத்திலிருந்து விடுப்பில் சென்ற ஊழியர்கள், அறிவிக்கப்பட்ட பின்னர் பொது போக்குவரத்து இல்லாததால், அலுவலகத்திற்கு  வேலைக்கு வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அவர்கள் ஊரடங்கிற்கு பின்னர் 23.3.2020 அன்று முதல் வேலைக்கு வந்ததாக கணக்கிடப்படும்.

அனுமதி வழங்கப்படாமல் விடுப்பு எடுத்துக் கொண்டால் அந்த விடுப்பு முடிந்த பின்னர் வரும் தேதியே, மீண்டும் அலுவலகத்தில் சேர்ந்த நாளாக கருதப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago