வங்கி ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசு ஒப்புதல்…!

Published by
Edison
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பைக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட,மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,ஸ்மார்ட் வங்கி முறைக்கான சீர்திருத்த கொள்கை ‘ஈஸ் 4.0 (EASE 4.0) திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து,பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.இதன்மூலம்,பொதுத்துறை வங்கி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தினை குடும்ப ஓய்வூதியமாக அவரது குடும்பத்தினர் பெற முடியும்.இதனால்,வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை அவரது குடும்பத்திற்கு கிடைக்கும். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு முதலாளிகளின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல்களை நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிங் பாண்டா, மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் குடும்ப ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்பால், ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்.
இதுகுறித்து,இந்தியன் வங்கிகள் சங்கம் (IBA) வெங்கடாசலம் கூறியதாவது: “இந்த தீர்வுத் திட்டத்தின் கீழ், மறுபயன்பாட்டு நன்மைகளை மேம்படுத்துவதில் அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், 2010 க்குப் பிறகு வங்கிகளில் சேர்ந்த இளம் ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய முறையில் நிர்வாகத்தின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்திற்கு பதிலாக 14 சதவீதமாக இருக்கும்.
அதாவது நிதிக்கு வங்கியின் பங்களிப்பு தொகையில் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்,மூத்த ஊழியர்களுக்கு, பணிக்கொடை, ஓய்வூதியம், இடமாற்றம் மற்றும் விடுப்பு காப்பீட்டுத் தொகைகள் அதிகரிக்கும்.குறிப்பாக,குடும்ப ஓய்வூதியத்தின் அதிகரிப்பு, சேவையின் போது அல்லது ஓய்வுக்குப் பிறகு தங்கள் அன்புக்குரியவரை இழக்க நேரிடும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்”,என்று தெரிவித்தார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago