இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தினை மற்றும் தரத்தினை பரிசோதிக்கும் ஓப்பன்சிக்னல், 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையை “ஸ்டேட் ஆப் மொபைல் நெட்வெர்க்ஸ் : இந்தியா (ஏப்ரல் 2018)” என்கிற பெயரின் கீழ் வெளியிட்டுள்ளது.
வெளியான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமையை தாங்கும் முகேஷ் அம்பானிக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கோ ஒரு மோசமாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களில், ஒவ்வொரு இந்திய டெலிகாம் ஆப்ரேட்டரும் (பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார்) அதன் 4ஜி கிடைக்கும் தன்மையை அதிகரித்துள்ளன. சில நிறுவனங்கள் 65% எல்டிஇ கிடைப்பதற்கான நுழைவாயில்களை கடந்து விட்ட நிலைப்பாட்டில், அவைகளில் சில இப்போது 70% என்கிற புள்ளியை நோக்கி பயணிக்கின்றன.
ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 Mbps அதிகமாகும்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…