இந்த தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.
கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடரபாக விசாரணை நடத்தி வருகிறது. பார்சலை வாங்க வரும்போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமாரை அதிரடியாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், ரமேஷ் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சுங்கத்துறை இதுவரை 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…