கேரளாவின் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி 30 கிலோ தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.பின்னர், அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது, சிவசங்கர் முன் ஜாமீன் கோரியுள்ளார். அவரது மனு வருகிற 23-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் 10 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது.
3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…