ரூ.2,500 கோடி மோசடி செய்த நகைக்கடை அதிபர் கைது !

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான் .இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார்.அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்.
இதனால் முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தனர். விசாரணையில் மன்சூர் கான் 2500 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.இதை அடுத்து முகமது துபாய்க்கு சென்றுவிட்டார்.
முகமது எதிராக கர்நாடக போலீசாரும் , அமலாக்கப்பிரிவினரும் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் கானிடம் லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த முகமது மன்சூர் கான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.