சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய முழுவதும் பல்வேறு பிரபல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பிரபல கோவில்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோவில் நிர்வாகம் திணறி வருகிறதாம்.
இதனை கருத்தில் கொண்டு, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய கோவில்களில் உள்ள தங்க ஆபரண நகைகளை வைத்து ரிசர்வ் பேங்க்கில் தங்க நகை கடன் பெற்று அதன் மூலம் அலுவல் பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாம்.
இதன்படி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.
ஏற்கனவே கேரள, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்து வந்ததால், அதனை சமாளிக்க அக்கோவிலில் உள்ள பயன்படுத்தப்படாத விளக்குகள், பாரம்பரிய பித்தளை பாத்திரங்களை விற்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டின் கீழ் கேர்ளாவில் சுமார் 1200 கோவில்கள் உள்ளன.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…