மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ இந்திய நாடு கிருஷ்ணர் பூமி. ஆதலால் நாட்டு பசுமாடுகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். இனியும் மதிப்போம். குழந்தை தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை தான் குடிக்கிறார்கள். ஆதலால் பசுவதையை நாங்கள் எதிர்க்கிறோம்.
நாட்டு பசும் பாலில் தங்கம் கலந்து இருக்கிறது. அதனால் தான் நாட்டு பசும்பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டு பசுவின் காம்பில் சூரியவெளிச்சம் படும்போது அது தங்கமாக மாறுகிறது.’ என சர்ச்சைக்கு உரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் தனது இரு நாட்டு பசுமாடுகளை அழைத்து அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் மணப்புரம் தங்க நகை கடன் வழங்கும் ஸ்தாபனத்திற்கு சென்று மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதை நினைவூட்டி தங்க நகை கடன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. நகை கடன் ஸ்தாபன அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…