“தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில்.. சிவப்பு நிறத்தில் அல்ல”- கொடியேறி பாலகிருஷ்ணன்!

Published by
Surya

கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா மற்றும் அவரின் கூட்டாளிகளான சரித், சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து, என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அதிக அளவில் தங்கம் கடத்தியதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்க கடத்தல் மேற்கொண்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் அரசு பாதுகாக்காது என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் செய்தியாளர்களை கொடியேறி பாலகிருஷ்ணன் சந்தித்தார்.

அப்பொழுது அவர், கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு, மறைமுகமாக பாஜகவை விமர்சித்தது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

58 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago