8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு தொடக்கியது. 2021 மாா்ச் இறுதி வரை தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது. பங்குச் சந்தையில் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாகும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான 8-வது கட்ட தங்கப் பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ளது. தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கத்தின் விலையை மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயத்துள்ளது. அதன்படி, இந்த முறை ஒரு கிராமுக்கு ரூ.4,791 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
அதே நேரத்தில், ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,741 ஆக இருக்கும். இந்த திட்டம் டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது டிசம்பர் 3 வரை தங்கப் பத்திரங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது.
தங்கப்பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். அதே நேரத்தில், அரசு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியையும் வழங்குகிறது. அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களை வாங்கலாம்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…