ஒலியை விட 6 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.!

Published by
murugan

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.  அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளில்  பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை:

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மணிக்கு 3,800 மைல்கள் அல்லது மணிக்கு 6,115 கிமீ வேகத்தில் பயணிக்கின்றன. இது மற்ற பாலிஸ்டிக் மற்றும் பயண ஏவுகணைகளை விட மிக வேகமாக செல்கிறது.

எச்.எஸ்.டி.டி.வி என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் ஆளில்லா ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். ஹைப்பர்சோனிக் விமானம் என்பது ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிகமாகும்.

பாலிஸ்டிக் ஏவுகணை:

பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளன. அதிகபட்ச வரம்புகள் 7,000 முதல் 16,000 கி.மீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இந்தியா மற்றும் வட கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன.

2018 ஆம் ஆண்டு அப்துல்கலாம் தீவில் இருந்து 5,000 கி.மீ தூரத்திம் பயணிக்கும் அக்னி-வி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

 

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago