நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கோதாவரி ஆற்றங்கரைக்கு அதிகமாக வந்திருந்தனர். ஆந்திர மாநிலம், தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பொச்சம்மா கோயிலிலிருந்து பாபிகொண்டாலு என்ற இடத்திற்கு சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்றுள்ளனர். அதில் 63 சுற்றுலாப்பயணிகளும், 9 பேர் அந்த சுற்றுலா கப்பலில் பணியாற்றும் பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர். அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாதி வழியிலேயே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் உயிர் காக்கும் கவசம் அணிந்து இருந்த 25 பேர் மட்டும் பத்திரமாக நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். மீதமுள்ளவர்கள் நீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 2 ஹெலிகாப்டர்கள், 6 படகுகள் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுவரை 12 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன மேலும் மீட்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் காணாமல்போன 30 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…