பாலியல் வழக்கிலிருந்து பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை – கோவா நீதிமன்றம் உத்தரவு..!

Published by
Sharmi

சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார்.

இதனால்  இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 341, 342, 354, 354-A , 354-B, 376(2)(f), 376(2) இந்த பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணத்தினால் அவர் அந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் பிறகு தருண் தேஜ்பால், அவர் மீது வைக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் மும்பை நீதிமன்றம் அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது  அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதி மன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அந்த வகையில் இந்த வழக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்துள்ளது.

இதில் கடந்த புதன்கிழமை விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு தேதியை வெள்ளிக்கிழமை அன்று ஒத்தி வைத்தார் கோவா மாவட்ட நீதிபதி க்ஷமா ஜோஷி. கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தருண் தேஜ்பால் குற்றவாளி இல்லை என்று கோவா நீதிமன்ற நீதிபதி க்ஷமா ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.

இதைப்பற்றி தருண் தேஜ்பால், தன் மீது தொடர்ந்த பொய்யான வழக்கிற்கு நீதிமன்றம் இப்போது நான் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. நியாத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் உண்மையின் பக்கம் நின்ற நீதிபதிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago