சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார்.
இதனால் இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 341, 342, 354, 354-A , 354-B, 376(2)(f), 376(2) இந்த பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணத்தினால் அவர் அந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் பிறகு தருண் தேஜ்பால், அவர் மீது வைக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் மும்பை நீதிமன்றம் அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதி மன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அந்த வகையில் இந்த வழக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.
இதில் கடந்த புதன்கிழமை விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு தேதியை வெள்ளிக்கிழமை அன்று ஒத்தி வைத்தார் கோவா மாவட்ட நீதிபதி க்ஷமா ஜோஷி. கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தருண் தேஜ்பால் குற்றவாளி இல்லை என்று கோவா நீதிமன்ற நீதிபதி க்ஷமா ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
இதைப்பற்றி தருண் தேஜ்பால், தன் மீது தொடர்ந்த பொய்யான வழக்கிற்கு நீதிமன்றம் இப்போது நான் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. நியாத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் உண்மையின் பக்கம் நின்ற நீதிபதிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…