திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என காதலியின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து மன உளைச்சலில் காதலன் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ராமேல் எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய மெஹ்தாப் ஷேக். பைசல்நகரில் குடியிருந்த பொழுது ஃபிர்தவுஸ் எனும் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவ்வப்போது சந்தித்து ஊர் சுற்றுவது மற்றும் அந்த பெண்ணிற்காக செலவு செய்வது என பணத்தை கழித்துள்ளார் மெஹ்தாப். இந்நிலையில் தனது குடும்பத்தினர் வறுமையில் வாடுவதாகவும் இனி அவ்வளவாக செலவு செய்ய முடியாது எனவும் மெஹ்தாப் கூறியும், ஃபிர்தவுஸ் கேட்கவில்லை.
எனவே திருமணம் செய்துகொள்வோம் என அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டுமெனவும், இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க முடியாது எனவும் மெஹ்தாபின் காதலியான ஃபிர்தவுஸ் மற்றும் அவரது தந்தை மிரட்டி உள்ளனர். எனவே மன உளைச்சலில் இருந்த மெஹ்தாப் பணம் அதிகம் இல்லாததால் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கி உள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். இதன் அடிப்படையில் அவரது சகோதரர்கள் அவரது காதலி ஃபிர்தவுஸ் மற்றும் அவரது தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…