சந்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன் காரணமாக மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவலர்களிடம் அந்த பெண்ணின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண் கடந்த 18-ம் தன் காதலன் அவளிடம் பேச வேண்டும் என்று தம் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளான்.இதன் காரணமாக காதலின் வீட்டிற்கு அந்த பெண் சென்றுள்ளார்.
ஆனால் அப்போது வீட்டில் காதலன் இல்லை.அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரி இருந்துள்ளன.அவர்கள் அந்த பெண்ணை பலமாக தாக்கி பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையால் அந்த பெண்ணை எரித்துள்ளனர்.
இதனால் தான் அந்த பெண்ணிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த பெண்ணின் உடல் சுமார் 80 சதவீதம் எரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரியை தேடிவருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…