வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனை திரும்ப தர மறுத்த காதலி கொலை..!

Published by
Rebekal

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், அதன் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே அவரது உறவினர்கள் பெண்ணை தேட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணின் உடல் திங்கள்கிழமை காலை ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  பெண்ணின் குடும்பத்தினர் மகேஷ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணின் காதலன் யாரென்று தேடி போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன் பின் நடத்திய விசாரணையில், அவர் தனது காதலிக்கு  வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட் போனை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்ததால் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தற்பொழுது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் ஸ்மார்ட் போனை திரும்ப கேட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

5 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago