கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. மறுபுறம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பல மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து கொண்டியிருக்கின்றன. இதற்கு மத்திய அரசின் நிர்வாகம் சரியில்லை என்று பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். கொரோனா உருமாறி வருவதால் இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியிருந்தது.

எப்போது உருவாகும் என தெரியாததால் 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் இப்போதே தயாராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதால் அதை சமாளிக்க தயாராகுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த இப்போதே அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, ஜூன் மாத தொடக்கத்திலிருந்து இந்த இரண்டாம் அலையின் வேகம் படிப்படியாகக் குறையும் என்று வைரஸ் ஆய்வாளர் ககன் தீப் காங் கூறியுள்ளார்.  கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதில் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் வைரஸ் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த லாக்டவுன் நிச்சயம் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன? 

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

9 minutes ago

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

56 minutes ago

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

1 hour ago

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…

2 hours ago

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

2 hours ago

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

3 hours ago