ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 எம்பி டேட்டா கிடைக்கும். இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 100 எம்பி பயன்படுத்திய பின், அவர்களது இணைய இணைப்பின் வேகம் நொடிக்கு 65 கிலோபிட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரீசார்ஜ் சேவையை பெறுவது எப்படி?
இதனை மை ஜியோ அப்ளிகேஷன் மூலமாக மட்டுமே பெற முடியும். அதில் ரீசார்ஜ் > வேல்யூ > Other Plans என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் அதன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…