ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் இனப்படுகொலையும் கிட்டத்தட்ட சமம் தான் என அலகாபாத் ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட தற்பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பணம் படைத்தவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மீரட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தன் அடிப்படையில் அலகாபாத் ஐகோர்ட் தற்பொழுது தாமாகவே முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது. இதில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு வினியோகிக்க கூடிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்து உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் லக்னோ மற்றும் மீரட் மாவட்ட கலெக்டர்கள் இதுகுறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…