மேற்கு வங்கத்தில் மே 4 முதல் சில இடங்களில் பொதுமுடக்கம் தளர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்கத்தில் மே  4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், ஊரடங்கு தளர்வு செய்யப்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது. பின்னர் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட உணவிற்கு தவிக்கும் சூழல் நிலவியுள்ளது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம் உயர்ந்துகொண்டே செல்ல நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனை சரிக்கட்ட மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டது. அதன்படி, தங்களால் முடிந்த நிதியை பல்வேறு துறையை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கில் தளர்வு இருக்குமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மனதில் மறுபடியும் குழப்பம் நிலவி வருகிறது.

அதனபடி, சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்க்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்தும் சரியாக அமைந்தால் திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

3 minutes ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

40 minutes ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

1 hour ago

வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…

2 hours ago

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…

2 hours ago

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…

3 hours ago