மேற்கு வங்கத்தில் மே 4 முதல் சில இடங்களில் பொதுமுடக்கம் தளர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்கத்தில் மே  4 முதல் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் தற்போது பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனா வைரசை பேரிடராக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமானதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், ஊரடங்கு தளர்வு செய்யப்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவியது. பின்னர் முடிவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட உணவிற்கு தவிக்கும் சூழல் நிலவியுள்ளது. கொரோனா பாதிப்பு ஒருபக்கம் உயர்ந்துகொண்டே செல்ல நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனை சரிக்கட்ட மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டது. அதன்படி, தங்களால் முடிந்த நிதியை பல்வேறு துறையை சார்ந்தவர்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கில் தளர்வு இருக்குமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்று மக்கள் மனதில் மறுபடியும் குழப்பம் நிலவி வருகிறது.

அதனபடி, சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் மே 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்க்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்தும் சரியாக அமைந்தால் திங்கட்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். 119 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

2 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

6 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

6 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

6 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

7 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

7 hours ago