நாகலாந்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பெருமளவில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டு வருகின்றது.
அது போல நாகலாந்து மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. எனவே மேலும் கொரோனா பரவாமல் தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…