கஜா புயல் நிவாரண நிதி…! ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க வேண்டும் …!பிரதமர்நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி நேரில் கோரிக்கை

Default Image

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இன்று காலை சந்திக்கவுள்ளார்.

இன்று கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை  அவரதுஇல்லத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெய்குமாரும் சென்றிருந்தார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற  சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதன் பின்னர் அவர் கூறுகையில்,  கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டுள்ளது.கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளேன் .சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவை விரைந்து அனுப்புவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்