காந்தியவாதியும்,முன்னாள் கர்நாடக எம்.பி.யுமான மேட்கவுடா காலமானார்..!

Published by
Edison

காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.மடேகவுடா நேற்று காலமானார்.

காந்தியவாதியும் முன்னாள் கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினருமான(எம்.பி) ஜி.மேட் கவுடா,வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 93, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளனர்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியுரப்பா, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மூத்த விவசாயி, முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. மேட் கவுடா அவர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது.அவரது மரணத்தோடு நாடு நிறைய மூத்த போராளிகளை இழந்துள்ளது. கடவுள் அவரது ஆத்மாவுக்கும், அவரது குடும்பத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சமாதானம் அளிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,கவுடாவின் மறைவுக்கு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒரு விவசாயியான கவுடா மைசூரு மகாராஜா கல்லூரியில் பட்டம் பெற்றார்.அதன்பின்னர்,மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட கவுடா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 1942 மற்றும் 1947 க்கு இடையில் பல்வேறு காலகட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவ்வாறு,சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது அவரது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது. 1962 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டுக்கு இடையில் கிருகாவலு சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் ஒன்பது மற்றும் 10 வது மக்களவைக்கு (எம்.பி.யாக) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…

27 minutes ago

பெரிய ஹீரோ பாட்டுக்கு பயங்கர பில்டப் கொடுக்க செலவு பண்றாங்க! சாம் சிஎஸ் ஓபன் டாக்!

சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…

1 hour ago

பெரியார் குறித்து சீமானின் பேச்சு…ஒரே வார்த்தையில் உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்!

சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…

2 hours ago

போதும்யா ஆடுனது… டெஸ்ட் செஞ்சுரியுடன் விடைபெறுகிறேன்.! ஓய்வு பெரும் இலங்கை வீரர்?

இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே  தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

“கால்பந்தில் நான் தான் சிறந்த வீரன்! மெஸ்ஸி, மரடோனா, பீலே..,” ரொனால்டோ பெருமிதம்!

ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ…

2 hours ago

“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு!

கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…

3 hours ago