Categories: இந்தியா

ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி பற்றிய முழு விவரம்..!

Published by
murugan

ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதையெடுத்து அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பூஜைகள் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில் கருவறையில் 51 அங்குலம் குழந்தை ராமர் சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.

குடமுழுக்கு நடைபெறும் நேரம்:

குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12:20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று முறைப்படி கோவிலை திறந்து வைக்க உள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா பிற்பகல் 12.05 மணிக்கு தொடங்குகிறது. கும்பாபிஷேகம் பிற்பகல் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது.

இதில் 12.29 நிமிடம் 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் கோயில் திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் நிறுவப்பட்டு உள்ள ராமர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரையில் ராமாயண கதைகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

8000 பேருக்கு அழைப்பிதழ்:

அயோத்தி முழுவதும் ஆங்காங்கே  சமையல் கூடங்கள் அமைத்து கும்பாபிஷேகம் விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு 24 மணி நேரம் இலவச பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இதில் 2000 பேர் சாதுக்கள், 5000 பேர் பல்வேறு துறை சார்ந்தவர்கள்.  இதில் நடிகர்களான அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், சிரஞ்சீவி, மோகன்லால், அல்லு அர்ஜுனன், ஜூனியர் என்டிஆர், கங்கனாராவத் உள்ளிட்டரும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி ஆகியோர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர்கள் கௌதம் அதானி, அம்பானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இஸ்ரேல் தலைவர் சோம்நாத் என 506 விவிஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பிதழ் தரப்பட்டிருந்தாலும், அவர் நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அயோத்தி கோவில்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 70 ஏக்கரில் 70 %  நிலம் பசுமையானதாக உள்ளது. 7 ஏக்கர் மட்டுமே கோயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இந்த கோவிலில் 392 தூண்கள் 44 கதவுகளும் உள்ளது. கதவுகள் அனைத்தும் தேக்கால் செய்யப்பட்டுள்ளது. இரும்பு,சுண்ணாம்பு, சிமெண்ட் போன்றவையும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10,000-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago