உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று இரவு 10 மணி முதல் 13- ஆம் தேதி அதாவது (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை கடும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 31,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9,980 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20,331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 10 மணி முதல் 13- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை கடும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாட்களிலும் ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய தேவை தவிர பிற போக்குவரத்துக்கு தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…