புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 4 வாரங்களில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுகிறது என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 23 முதல் 26 வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் புதுச்சேரியில் தினதோறும் பாதிப்பு மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…