நாகலாந்து மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற மே 14ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் பல்வேறு அமல்படுத்தி உள்ளது.இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், வருகிற மே 14-ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதாவது மே 14ம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது இந்த ஏழு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மேலும் புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…