கொரோனா அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து இருந்தாலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள மாநிலம், இரண்டாம் அலையில் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்துள்ளதால், இன்று முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று கேரளாவில் அவசியமின்றி இயங்கக்கூடிய வாகனங்கள் மற்றும் வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…