தனியார் தடுப்பூசி மையங்கள்,அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்.
இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில்,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.அதன்படி, 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே,பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2 ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…