இந்த வங்கிகளில் ஜூன் 1 முதல் IFSC மற்றும் காசோலை பரிமாற்றத்தில் சில மாற்றம் :முழு விவரம் இதோ !

Published by
Dinasuvadu desk

காசோலை மூலம் செலுத்தப்படம்  பணம் தொடர்பான அதன் நடைமுறையில் பாங்க் ஆப் பரோடா சில மாற்றங்களைச் செய்துள்ளது, அதே நேரத்தில் கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன.

நீங்கள் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி அல்லது சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த வங்கிகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் சமீபத்திய சில மாற்றங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

காசோலை மூலமாக பணம் செலுத்தப்படும்  அதன் வழக்கமான நடைமுறையில் சில மாற்றங்களை பாங்க் ஆப் பரோடா செய்துள்ளது.கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு தேவைகள் தொடர்பான சில மாற்றங்களைச் செய்துள்ளன.

பாங்க் ஆப் பரோடாவின் காசோலை கட்டண மாற்றங்கள்:

வருகின்ற ஜூன் 1 முதல், பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு காசோலைகள் மூலம் செலுத்தும் போது மோசடி சம்பவங்களைத் தடுக்க ‘Positive pay confirmation’ என்ற முறையை கட்டாயமாக்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்குவதற்கு  முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் அதிக மதிப்புமிக்க காசோலைகளை சி.டி.எஸ் கிளியரிங் வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் கடந்து செல்ல முடியும் என்று  பாங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வங்கி மேலும் கூறியதாவது அனுப்ப  வேண்டிய தொகை ரூ .2 லட்சத்துக்கு மேல் இருக்கும்போது மட்டும் வாடிக்கையாளர்கள் தங்கள் காசோலை விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியின் IFSC குறியீடுகள் இந்த தேதியில் மாற்றம்:

கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கணக்கு வைத்திருக்கும்  கிளைகளின் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம், சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளையின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை 2021 ஜூன் 30 க்குள் புதுப்பிக்குமாறு கூறியுள்ளது.

இந்த வங்கிகளின் புதுப்பிக்கப்பட்ட ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகளை அறிய அந்தந்த வாடிக்கையாளர்கள் சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியின் வலைத்தளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியில் இணைக்கப்பட்டது. அதே ஆண்டில் மற்றொரு பெரிய வங்கி இணைப்பு பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இது இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இணைத்தது சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

55 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago