பொது இடங்களில் PM Wani என்ற பெயரில் இலவச வைஃபை சேவையை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் இலவச வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, PM WANI என்ற பெயரில் பொது இடங்களில் இலவசமாக வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் டேட்டா சென்டர்கள் திறக்கப்படும். அதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்கவும், கொச்சி மற்றும் லட்சத்தீவுகளுக்கு இடையே நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…