நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் படி “பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டம்” 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இனி நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். கேரளாவின் சுகாதாரத் துறை 11 மாவட்டங்களில் புதிய பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை வீட்டிலேயே டயாலிசிஸ் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தியுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தின் அதிகரிப்பு ஹீமோ டயாலிசிஸை படிப்படியாகக் குறைப்பதன் ஒரு பகுதியாகும். தற்போது இந்த வசதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் பெரிட்டோனியல் டயாலிசிஸ் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுகாதாரத் துறையின் கீழ் உள்ள குடும்ப நல மையங்கள் முதல் மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகள் வரை ஒவ்வொரு மாதமும் 36,000 முதல் 39,000 டயாலிசிஸ் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. தாலுகா, பொது மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் சில சமூக சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 92 மருத்துவமனைகளில் 937 டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டால், பின்னர் டயாலிசிஸ் செய்ய மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…