திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனத்திற்கு அனுமதி.!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று டிக்கெட் பெறுபவர்கள் வரும் 4-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச தரிசன டிக்கெட் மூலம், நாள்தோறும் 10,000 உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மூலம், 20 ,000பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்