உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு.
மே ஒன்றாம் தேதி 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எனும் முதன்மைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றை பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருளை கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த மே 1ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு முதல் கட்டமாக சமையல் எரிவாயு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் எனவும் அவர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…